Wednesday, August 21, 2013
Sunday, August 18, 2013
சரித்திரம்
வியாசர் விநாயகருக்கிட்ட பதிலாணை
இடைவிடாமல் கதையைச் சொல்லச் சொன்ன
மூத்தவனின் உத்தரவிற்கு மறுமொழி
நிதானமாய் கதை தொடர கண்ட வழி
நின்று கிரகித்து பதித்தான் ஆனைமுகன்
ஆயிரமாயிரம் ஆண்டு வாழ்ந்தவரும்
அசுரரும் அந்தணரும் அரசரும் ஆரணங்குகளும்
அவர்தம் அளவில்லா ஆசாபாசங்களும்
யயாதிக்கு யௌவனம் ஈன்று மூப்படைந்த
ஐந்தாம் மகன் பாசமும் பெற்ற பரிசும்
வரிசையாய் தொடரும் மகாகாவியமும்
மனிதன் மாறாது சரித்திரம் மாறாது
தொடரக்காண்பது மாயையா உண்மையா
Friday, August 16, 2013
புதிதா
பாவிக்குப் பசியெடுத்தால் பாசம்
திமிரெடுத்தால் பறக்கும் சாட்டை
மனம் போல் ஆடுவான் வேட்டை
உபகாரத்துக்குப் எடுத்த அவதாரம்
யந்திரமாய் இயங்கவே ஒரு தாரம்
சிந்திக்கத் தெரியாத, கூடாத ஒருத்தி
கல்லை புல்லை பக்தியில் இருத்தி...
செக்கு மாட்டுத் தடத்தில் உழலும் மனிதா
அக்கினிக்குஞ்சு காட்டை எரிப்பது புதிதா
Thursday, August 15, 2013
அழகிய அனுபவம்
ஒரு காக்காயை சுட்டபின்
சிறுவர் புதிர் இதுதானே
நிமிர்ந்து நேராய் நடந்தவர்
பட்ட துயர் பேசுகின்றன
காவியமும் சரித்திரமும்
மெத்த உணர்ந்தவர் நோகாமல்
நாசுக்காய் நயமாய் வளைந்திட
பறந்துவிட்ட காக்காயாயிருக்க
நெஞ்சை நிமிர்த்தும் தீரர்களோ
பிறப்பதும் சிறப்பதும் இன்றும்
தொடர்வதே அழகிய அனுபவம்
Subscribe to:
Posts (Atom)
