Friday, July 3, 2020

பாரீர் பாரீர்

IndiBlogger - The Indian Blogger Community பாரீர் பாரீர் பாரெனும் நாடகமேடையில்
பவுமானமாய் அரங்கேறும் பூனை நடையினை
திருப்தியின் திசை தெரியா பேராசைக்காரர்
ஈகையின் ஈரம் அறியா சுயநலவாதிகள்
பகையை மறைத்து பல்லை இளிக்கும் பாசாங்குக்காரர்
கண்ணை விற்று ஓவியம் வாங்கும் மூடர்கள்
கதையை திரித்து கல்லா கட்டும் ஊடகக்காரர்
விரசம் நாடும் சிற்றின்ப சித்தர்கள்
அதிகார மமதையில் ஆடும் அதிகாரிகள்
ஆன்மீக போர்வையில் திளைக்கும் காமுகர்
பண்பாடுகளை பறக்கவிடும் புரட்சியாளர்
உறவுக்கு புதுப் புது அர்த்தங்கள் சொல்லும் மேதைகள்
புனிதத்தை கடைச்சரக்காக்கும் பேதைகள்
தூண்டிலில் சிக்கும் மீன்கள் விளக்கில் வீழும் விட்டில்கள்
மக்கள் சேவை செய்ய வந்த பொய்யர்கள்
மந்தைகளாய் ஆக்கி கொழுத்த கபடதாரிகள்
கஜானாவை நிரப்புகின்ற சிறந்த குடிமகன்கள்
செல்ஃபோனுடனே வாழுகின்ற தனித்தீவுகள்
கொட்டிக்கிடக்கும் இயற்க்கை அழகை ரசிக்காத ஜன்மங்கள்
கணம் கணமாய் வாழ்க்கைத் தேனை ருசிக்காத ஜீவன்கள்
வேடிக்கை மாந்தரின் விந்தையான அணிவகுப்பு
கேளிக்கை ஆனதோ விலையில்லா வாழ்க்கையிங்கு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community