பாதைகள் நீளும்
அலைகள் ஓய்வதேயில்லை
விலங்குகள் ஏதும் இல்லை
விலங்காய் வாழ்வதற்கு
விளக்கங்கள் வேண்டியதில்லை
தர்மம் தெரியாது
பாவம் புரியாது
தனக்காய் வாழ்பவர்க்கு
வயது மட்டும் ஏறும்
புத்தி கொஞ்சமும் வளராமலே
உண்டு உறங்கி எழும் பதர்களுக்கு
நாய் வால் நிமிர்ந்ததில்லை
திருட்டுப்பூனை திருந்தியதில்லை
மறந்தால் அமைதியில்லை
கடலில் கலந்தது ஆறு
கலக்கச் சொன்னது யாரு
உப்பாய் போனது நீரு
பகலில் தொலைத்ததை
இருட்டில் துழாவுவாயா
கனவின்னும் காண்பாயா
ஏட்டில் படிக்காத நோவு
காட்டில் காயும் நிலவு
சோலையில் கூவும் குயிலு
ரசிக்க நினைத்தது மழையை
துளிர்க்கும் இலையை
ருசிக்க முடிந்தது எரிமலை தீயை
நளனும் கோவலனும் நலிந்த நாட்டில்
பராசக்தி அவதரிப்பாளா
நீர்க்குமிழியின் கனவு
No comments:
Post a Comment