Friday, February 3, 2017

பெண்மனம்

IndiBlogger - The Indian Blogger Community பெண்மனம் என்ன வெண்ணெயோ
உருகுதே இளகுதே எளிதிலே
அதுவே கடின பாறாங்கல்லோ
எதையும் தாங்குமோ கனக்குமோ
கொதிகலனோ குளிர்நிலவோ முறனோ
வன்மத்தின் பொறுமையின் கூடாரமோ
கணத்தில் மூடும் தொட்டாசிணுங்கியோ
வண்ணம் மாறும் ஓர் பச்சோந்தியோ
மலருக்கு மலர் தாவும் பட்டாம்பூச்சியோ
இதை அதை கண்டதை விரும்புமோ
அமர்ந்தாட உகந்த உல்லாச ஊஞ்சலோ
நெருங்க அஞ்சிடத்தக்க செந்தணலோ
நொந்த மனதை வருடும் மயிலிறகோ
தளிரோ மலரோ தீஞ்சுவை கனியோ
தாயாய் சேயாய் தழுவும் தென்றலோ
குழம்பித்தவிக்குது அப்பாவி ஆணினம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community