மெரினா ஒரு மௌன சாட்சி என்றும்
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்
வறுத்த கடலை சோளக்கதிர் மீன்
வகை வகையாய் குடித்து உண்டு
ராட்டினம் கிளி ஜோசியம் ரசித்து
தொடுவானம் வரை நீளும் கனவு
இன்பம் துன்பம் இரண்டும் பகிர்ந்து
கடல் நீரில் கண்ணீரை கரைத்து
புது அத்தியாயம் எழுத எழுந்து
துவக்கமும் முடிவும் அரங்கேற்றி
அமைதியாய் அப்பாவியாய் கிடக்கும்
நீண்ட அதிசய அழகிய மர்மமே
No comments:
Post a Comment