Friday, March 18, 2022

பெண்ணே பெண்ணே


பசியாற்றி பசியாறிய அன்னபூரணிக்கு
வந்திருக்கு கடுஞ்சோதனை
பிரபஞ்சமாய் நிறைந்து நின்ற சக்திக்கு
புள்ளியாய் நிற்கச் சொல்லி போதனை
தன்னை இரண்டாமிடத்தில் நிறுத்தி
முதலிடத்தைப் பிடித்துக் கொண்ட சமர்த்தி
இனி ஆவாள் கூறுகெட்ட மடச்சி
இறக்குமதியாகுது புதியதோர் சதி
உப்பாய் சர்க்கரையாய் கரைந்து கலந்து
கண்ணுக்குத் தெரியாமல் இருப்பை ருசியில் உணர்த்தியவள்
கரையாமல் கலக்காமல் படைப்பாள்
வாய்க்கு விளங்காத விபரீத சமையல்
தனக்குள் உலகை அடக்கியவள்
தான் மட்டுமே உலகம் என்பாளாம்
தேர் சக்கரம் ஓட இன்றியமையாத அச்சாணி
தனியே கழன்று சென்று என்ன சாதிக்கும்
தேர் தான் எப்படி ஓடும்
அங்கமாய் இருந்து அனைத்துமாய் இயங்குபவள்
தனி அங்கமே உலகமென மயங்குவாளோ
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி
சுமுகமான சுகமான உறவுகளை உதறி
உன்னைப் பார் உன்னை மட்டும் முதலில் பார்
என்று உடுக்கடிக்கும் கூட்டத்தால் சிதறி
தொலைந்த கூட்டுக் குஞ்சுகள் பதறி
உருவாகும் தான்தோன்றி உலகில் இன்னும்
பார்க்கக் கொடுத்து வைத்தது என்னென்னவோ
Like
Comment

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community