Friday, November 17, 2017

உண்மைகள்.

IndiBlogger - The Indian Blogger Community  இயற்கையில் ஆணினத்திற்கும், பெண்ணினத்திற்கும் பிரத்தியேக குணாதிசயங்களும், கடமைகளும், திறமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. உலகில் உயிரினம் பெருக, செழிக்க, தொடர இவற்றை புரட்டிப் போடாமல் இருப்பது முக்கியம். ஆணினமும், பெண்ணினமும் இயல்பாகவே ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. விலங்கினத்தில் இதைப் பற்றிய தெளிவு இருக்கிறது, குழப்பமில்லாமல் சங்கிலி தொடர்கிறது. பகுத்தறிவு படைத்த மனித இனத்தில் சில புரட்சிக் கருத்துக்கள் விபரீத விளைவுகளையும் பல சமயங்களில் ஏற்படுத்துகிறது. பெண் ஆசைப்பட்டால் ஆணின் சட்டையை அணிந்து ஆனந்தமடையலாம். ஆனால் ஆணுக்கு சேலை கட்டிவிட விரும்புவது எல்லை மீறிய செயலாகும். சில மாற்றங்கள் சாத்தியம், அவசியம். பல மாற்றங்கள் சாத்தியமில்லை, அநாவசியம். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆணிடமிருந்துதான் பெண் கருவை பெற முடியும், ஆணால் ஒரு நாளும் கருவை சுமக்க முடியாது. இந்த மாதிரியான மாற்ற முடியாத இயற்கை நியதிகளுடன் முரண்படாமல் வாழும் வாழ்க்கையில் பிரச்சினைகள் குறைவு, நிம்மதி அதிகம்.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community