Sunday, March 16, 2014

புது நாகரிகம்

IndiBlogger - The Indian Blogger Community அன்று நடந்தது ஒரு புரட்சி
விதவை முகத்தில் மலர்ச்சி
வெறுமை தொலைத்த நெற்றி
கையில் கழுத்தில் அணிகள்
இன்று தேவை ஒரு புரட்சி
பொதுவாய் பெண் என்பவள்
வயது பருவம் பொருட்டின்றி
என்றும் மூளியாய் நிற்கிறாள்
பூவை தொலைத்து விட்டு
பொட்டை அழித்து மறந்து
மொட்டை கை கழுத்துடன்
காணத்தான் சகியலையே
புது நாகரிகம் புகுந்ததேன்
புரியாமல் தவிக்கிறேன்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community