Sunday, April 21, 2013

வாடிக்கை

IndiBlogger - The Indian Blogger Communityதன்னுரையை வீரிட்டுத் துவங்கும் குழந்தை அறியாது
தனக்குக் கொடுக்கப்பட்ட மணித்துளிகள் எத்தனையென
முன்னுரையை துவங்கியதும் முடிந்துவிடுமா பேச்சு
அருமையான உச்ச கட்டத்தில் அணைந்துவிடுமா மூச்சு
கொட்டாவிகளை ஏளனப் பார்வைகளைக் சந்திக்கணுமா
வீரனாய் சூரனாய் சாதனையாளனாய் இறுமாந்து திரிந்து
கோபுரத்தைத் தாங்கும் பதுமையாய் தன்னை பாவித்து
இம்மேடையில் முழங்குவதுதானே என்றும் வாடிக்கை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community