மீனாச்சிக்காக ஊரெங்கும் திருவிழா
மல்லியப்பூ மணக்கும் சித்திரையிலே
மாசி வீதியிலே தினமும் ஊர்கோலம்
மனசெல்லாம் நிறைஞ்சிருக்கும் காலம்
அன்புத் தங்கச்சிக்கு சீரோடு வர்ராரு
அண்ணன் அழகரு வைகை ஆத்தோட
கொட்டிக் கிடக்கு பவுர்ணமி நிலா
கூடிக் கிடக்கு பல ஊரு சனம்
பந்தல் போட்டு அன்னமும் பானமும்
பரிமாறும் பஞ்சமில்லா பக்தியிருக்கு
வெள்ளந்தியா திரியுது கூட்டமிங்கு
வெல்லமா இனிக்குது ஆத்தா ஆட்சி
Very nice
ReplyDeleteஅழகருக்கும் அம்மனுக்கும் அழகுக்கு ஏது குறைவு? அவர்களை பற்றி பாடும் கவிக்கும் குறை ஏது?
ReplyDelete"வெள்ளந்தியா" என்றது மதுரை வட்டார வழக்கு போலும்!
Thank you! I am born and bred in Madurai!
ReplyDelete