இறைவனும் இறைவியும் சேர்ந்து ரசிக்க
உலகத் திரையரங்கில் எத்தனையோ
நிழற்படங்கள் எதிர்பாராத திருப்பங்கள்
திகிலுடன் சாகசம் நகைச்சுவை உருக்கமென
நவரச வேடிக்கைகள் விரிகையில் அவரே
திகைத்து எழுதிய கதை வசனம் மறப்பரோ
கலந்து ஊற்றிய மருந்து
காரிகையெனும் ஒரு விருந்து
வஞ்சம் பிடிவாதம் பொறாமை சூது
இன்னும் பல அரக்கப் போக்கு
ஒவ்வொன்றும் இத்தனை அவுன்சு
பழைய சினிமா பாட்டில் கேட்டது
செவி மடுக்கும் பாவனையில்
உதிரும் பல 'உம்', 'அடடா'
ஆர்வமாய் அவனிடம் கொட்ட
கோடி கதை அவளிடமிருக்க
தன்னை மறந்து கணினியில்
அவன் லயித்திருக்க அதை
அவளும் உணர்ந்து மடக்க
நடித்தவன் முழிப்பது திருதிரு
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.