Thursday, October 13, 2016

மாணவன்

IndiBlogger - The Indian Blogger Community மாணவன் அவன் என்றென்றும்
மாலை சூடிய நாள் முதல்
மண்ணுக்குள் போகும் வரை
மனையாளை படிக்கிறான்
முடியாத பாடத்திட்டமது
முடிவதே இல்லை பொருள் புரிய
முரண் நிறைந்த அகராதியில்
முணுக்கென்று கோபமும்
முறுவலுடன் கொஞ்சலும்
முன்னறிவிப்பில்லா வானிலைகள்
முழம் பூ போதுமாயிருக்கிறது
முத்துமணி மாலைகளும் கூட
மூலையில் வீசப்படும் சமயமுண்டு
முழி பிதுங்கி நிற்பதுண்டு
முன்னே போனால் முட்டு
முடங்கிப்போனால் குட்டு
முழுதாய் புரிந்ததே இல்லை
மதிப்பெண் பெற்றிட போராட்டம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community