Monday, October 3, 2016

பெண்ணின் பெருமை

IndiBlogger - The Indian Blogger Community
யாருக்கும் பொருட்டில்லை பெண்ணின் பெருமை
தனியாய் அவள் மதிப்பு தெரியவில்லை அன்று
தெரியவிடவில்லை நம் ஆணாதிக்க சமுதாயம்
கொழு கொம்பை பின்னிப்படரும் கொடியவளென்று
தந்தை கணவன் மைந்தனென என்றும் ஆண்மகனை
சார்ந்தேயிரு என்றான் மனு பரம்பரையாய் தொடர்ந்த
மூளைச்சலவையில் மயங்கி மழுங்கி மங்கி மங்கை
சுய பலமறியாது அடிமையாய் கிடந்த காலம் முடியுது
ஆளில்லா கோட்டையில் அரக்கனால் சிறைப்படுத்தி
வாடிய அரசகுமாரி ஆண்டாண்டு காலம் காத்திருந்தாள்
அரசகுமாரன் வந்து விடுவிக்க என்று கதை சொன்னால்
இன்றைய குட்டிப்பெண் அலுத்துக்கொள்கிறாள் அழகாக
அரக்கனை சாமர்த்தியமாய் சமாளித்து வெல்லாமல்
அயலான் உதவிக்கு வர காத்திருப்பது மடமை என்று
பிறந்துவிட்டது புது யுகம் பொலிவுடன் விழித்தெழுங்கள்
பொல்லாத சாத்திரத்தை கதைகளை மாற்றி எழுதுங்கள்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community