Monday, October 12, 2015

பதைப்பு

IndiBlogger - The Indian Blogger Community காலம் மாறிப் போச்சோ 
கலி முத்திப் போச்சோ 
பருவங்கள் மாறுது 
மாதங்கள் மயங்குது 
மனசு ஏனோ பதைக்குது 
மருண்டுதான் போகுது 

அதிசயமாய் இருக்குது 
ஆடியிலே காற்றில்லை 
அம்மி பறக்கவில்லை 
புழுதியிறைக்கவில்லை 
கண்ணில் தூசி உறுத்தவில்லை 
மனதில் ஏதோ உறுத்தியதே 

பங்குனி பிறந்துச்சி 
பதைபதைக்கும் வெயிலில்லை 
மப்பும் மந்தாரமுமாச்சி 
விடாமல் ஒரு வாரம் 
அடைச்சி மழை பெய்யலாச்சி 
வானம் பாத்த பூமி கூட 
வெள்ளக்காடா மாறிப் போச்சி 
விளைஞ்ச பயிர் நாசமாச்சி 

காணாத காற்றழுத்தம் 
கடலிலே புயலடிக்குதாம் 
ஏனிந்த தடுமாற்றம் இதுவரை 
இல்லாத பருவ மாற்றம் 
அரிதான கொந்தளிப்பு 
அதிகமான நிலநடுக்கம் 
எதிர்பாராத சுனாமி 
அளக்க முடியா இழப்புகள் 

வகனப்புகையும் ஆலைக்கரியும் 
வான மண்டலத்தை கெடுக்குது 
ஆராய்ச்சிக் கழிவும் அழியாத குப்பையும் 
நீர்நிலைகளை நச்சாக்குது 
அநியாய வேட்டையில் 
வனவிலங்கும் அழியுது 
கண்ணிகள் அறுந்த சங்கிலியில் 
உயிரினங்கள் ஊசலாடுது 

மரபணுவை பிளந்து மாத்தி 
விளைச்சலிலே விளையாடி 
பெருசு பெருசா காயும் கனியும் 
கண்ணைத்தான் கவர்ந்திழுக்குது 
வீரிய தானியம் முளைக்குது 
விதை நெல் என்ன ஆச்சி 
வெள்ளாமையிலே புரட்சி 
வரிசையாய் வியாதி காத்திருக்கு 

அறிவு மட்டும் வளருதா 
விந்தை காண விளையுதா 
விபரீதம் அதில் விளையுதா 
விவேகமே இல்லாமல் 
பின்விளைவை அறியாமல் 
பொறுப்பின்றி விளையாடினால் 
பூமிக்கோளமே நடுங்குதோ 
நாளை என்ன நடக்குமோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community