Monday, October 12, 2015

வானம்

IndiBlogger - The Indian Blogger Community வானம் ஒரு மைதானம்
நீல நிற காலையில்
வெள்ளைக்கரடிகள் ஓடும்
ஒன்றை ஒன்று துரத்தும்
கட்டிப் பிடித்து உருளும்
பொழுது சாய்கையில்
செங்கரடிகள் சினந்து
திரண்டு அணிவகுக்கும்
இருட்டியபின் அங்கு
கருங்கரடிகள் ஆட்சி
இடி குரலில் முழங்கிட
அட்டகாசமாய் மழை
கட்டும் ஒரு பாலம்
மண்ணோடு உறவாடும்
எட்டாத தூரமேது
கிட்டும் வழி தேடு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community