Monday, October 12, 2015

தீர்ப்பு

IndiBlogger - The Indian Blogger Community முழுதாய் மனதைத் திருடிவிட்டாய்
முற்றிலும் என்னை மாற்றிவிட்டாய்
என்னை எனக்கே தெரியவில்லை
எதுவும் முன்போல் இப்போதில்லை

நினைவை அழித்து கனவை நிறைத்து
நிலை தடுமாறி நிற்க வைத்தாய்
உன் விரல் நுனி கட்டளையில்
இயங்கும் இயந்திர பொம்மையானேன்

பொல்லாத மாயம் செய்தாய்
கல் மனதை கரைத்துவிட்டாய்
சொல்லாத சுகமிதுதானோ
வெல்ல இனியேதுமுளதோ

தந்திரங்கள் பல செய்து
ஆயுதங்கள் பல கொண்டு
அடியோடெனை வீழ்த்திவிட்ட
அழகான கொடும்பாவாய்

உள்ளங்கை நெல்லிக்கனி போல்
உன் குற்றமிங்கு நிரூபணம்
நீதிமன்றம் செல்ல வேண்டாம்
வாதிட்டு விளக்க வேண்டாம்

நானே சொன்னேன் தீர்ப்பினை
தந்தேன் தகுந்ததோர் தண்டனை
அடைத்தேன் நெஞ்சக் கோட்டைக்குள்ளே
ஆயுள் கைதியாக்கிவிட்டேன் உன்னையே

அல்லும் பகலும் காவலுண்டு
அதில் அணையாத காதலுண்டு
இமைக்குள் இருக்கும் கண்மணியாய்
இருப்பாய் என்னுள் பத்திரமாய்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community