Monday, October 12, 2015

இல்லற தர்மம்

IndiBlogger - The Indian Blogger Community கண்டிக்கிறான் கண்காணிக்கிறான் 
கண்டபடி திட்டித் தீர்க்கிறான் 
காட்டுமிராண்டிபோல் நடக்கிறான் 
கடுமையாய் ஆதிக்கம் செய்கிறான் 
கட்டுப்பெட்டியாயிருக்கச் சொல்கிறான் 
கட்டுப்பாடுகள் பலவும் விதிக்கிறான் 
கைகட்டி சேவகம் செய்யச் சொல்கிறான் 
கண்ணீரில் தினம் மிதக்க வைக்கிறான் 

அவனியல்பு மரபணுவின் ஒரு ஆதி கோளாறு 
அதை வெல்லும் சங்கதிகள் உன்னிடமுளது 
அனுசரித்துப் போய்விடு பொறுமை காட்டிடு 
அன்புக்கு அடங்கும் முரட்டுக்குழந்தையவன் 
அப்படி இப்படி இன்று இருந்தாலும் விரைவிலே 
அடங்கிக் கிடப்பான் சாதுவாய் உன் நிழலிலே 
அழகான குடும்பத்தின் ஆணிவேராயிருந்திடு 
அறிவாய் உன் ஆட்சியின் அகண்ட எல்லையை 

உனக்கென்ன குறைச்சல் எதிலே மட்டம் 
உரிமைகள் இல்லாத பதுமை நீயல்லவே 
உலகம் தெரியாத ஒரு பேதையுமல்லவே 
உணர்ச்சியில்லா பொம்மையா பெண்டாட்டி 
உருட்டிப்பார்த்தால் திருப்பி முறை நீ 
உரக்கக் கத்தினால் எதிர்த்துப் பேசு 
உக்கிரமாய் போராடு விட்டுக்கொடாதே 
உன் நியாயங்கள் உறுதியாய் நிற்கட்டும் 

அன்றும் இன்றும் கண்ணோட்டம் வேறு 
ஆட்டம் கண்டது வாழ்வின் அடித்தளம் 
அடங்கச் சொன்ன பெரியவர் இன்றில்லை 
ஆடச் சொல்பவர் ஆதரவு அதிகமானது 
அதிலே பலியாகிப்போகுது இனிய நல்லறம் 
ஆயிரம் காலப் பயிருக்கின்று அற்பாயுசு 
அவசரமான காலத்தின் அவதியில் சிக்கி 
ஆவியை விட்டது அரிய கண்டிக்கிறான் கண்காணிக்கிறான் 
கண்டபடி திட்டித் தீர்க்கிறான் 
காட்டுமிராண்டிபோல் நடக்கிறான் 
கடுமையாய் ஆதிக்கம் செய்கிறான் 
கட்டுப்பெட்டியாயிருக்கச் சொல்கிறான் 
கட்டுப்பாடுகள் பலவும் விதிக்கிறான் 
கைகட்டி சேவகம் செய்யச் சொல்கிறான் 
கண்ணீரில் தினம் மிதக்க வைக்கிறான் 

அவனியல்பு மரபணுவின் ஒரு ஆதி கோளாறு 
அதை வெல்லும் சங்கதிகள் உன்னிடமுளது 
அனுசரித்துப் போய்விடு பொறுமை காட்டிடு 
அன்புக்கு அடங்கும் முரட்டுக்குழந்தையவன் 
அப்படி இப்படி இன்று இருந்தாலும் விரைவிலே 
அடங்கிக் கிடப்பான் சாதுவாய் உன் நிழலிலே 
அழகான குடும்பத்தின் ஆணிவேராயிருந்திடு 
அறிவாய் உன் ஆட்சியின் அகண்ட எல்லையை 

உனக்கென்ன குறைச்சல் எதிலே மட்டம் 
உரிமைகள் இல்லாத பதுமை நீயல்லவே 
உலகம் தெரியாத ஒரு பேதையுமல்லவே 
உணர்ச்சியில்லா பொம்மையா பெண்டாட்டி 
உருட்டிப்பார்த்தால் திருப்பி முறை நீ 
உரக்கக் கத்தினால் எதிர்த்துப் பேசு 
உக்கிரமாய் போராடு விட்டுக்கொடாதே 
உன் நியாயங்கள் உறுதியாய் நிற்கட்டும் 

அன்றும் இன்றும் கண்ணோட்டம் வேறு 
ஆட்டம் கண்டது வாழ்வின் அடித்தளம் 
அடங்கச் சொன்ன பெரியவர் இன்றில்லை 
ஆடச் சொல்பவர் ஆதரவு அதிகமானது 
அதிலே பலியாகிப்போகுது இனிய நல்லறம் 
ஆயிரம் காலப் பயிருக்கின்று அற்பாயுசு 
அவசரமான காலத்தின் அவதியில் சிக்கி 
ஆவியை விட்டது அரிய இல்லற தர்மம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community