Monday, October 12, 2015

மன வண்டே!

IndiBlogger - The Indian Blogger Community பூப்பூவாய் ஓடுகிறாய் 
புதைந்து புதைந்து தேடுகிறாய் 
ரீங்கரித்து பாடுகிறாய் 
ஏங்கியேங்கி நாடுகிறாய் 

பூங்காவனங்களிலே 
புல்வெளிகளிலே 
புதர்களிலே 
பொய்கைகளிலே 

விதவிதமாய் ருசித்தாய் 
விருந்துண்டு கிடந்தாய் 
மருந்தொன்று வேண்டாமல் 
மயக்கமும் தீராமல் 

போதையிருந்தது 
பித்தம் பிடித்தது 
சித்தம் கலைந்தது 
வித்தை கசந்தது 

களைத்தாய் 
இளைத்தாய் 
திகைத்தாய் 
விழித்தாயா 

மன வண்டே! 
உண்ட தேனிலே 
உன்மத்தம் கொண்டாய்! 
உன்னதம் கண்டாயா? 

பகட்டான வாழ்விலே 
திகட்டாத மதுவுண்டோ? 
பசியும் ருசியும் வேண்டாத 
பேரின்பம் இருக்கிறதா?

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community