Monday, October 12, 2015

கதை

IndiBlogger - The Indian Blogger Community நேற்றில் மட்டும் வாழ்ந்தேன் நேற்று
இன்றில் மட்டும் இருக்கிறேன் இன்று
படிக்காத பக்கங்கள் இன்னும் எத்தனை
புரட்டும் இப்புத்தகமிதில் இதுவரை
முடிந்த அத்தியாயங்கள் நிறையத்தான்
நடந்த நாடக காட்சிகள் ஏராளம்தான்
எத்தனை திருப்பங்கள் எத்தனை மர்மங்கள்
எதிர்பாராத நிகழ்வுகள் கிளறிய ஆர்வங்கள்
ஆச்சர்யங்கள் ஏமாற்றங்கள் நிறைவுகள்
புதிது புதிதாய் தோன்றின கதாபாத்திரங்கள்
காணாமல் போயின பல நட்சத்திரங்கள்
கண்ணுக்குத் தெரியாத விரல்கள் இயக்கும்
கருத்தைக் கவரும் அதிசய பொம்மலாட்டம்
பொதுவாய் புரியக்கூடிய கதையோட்டம்
அடிமனதில் படியும் ஒரு ஆற்று வண்டல்
அதில் வளரும் வளமான கற்பனைகள்
பட்டின் இழையாய் ஊடூறுது ஒரு கரு
அதன் அர்த்தம் தேடுது என் மனது
நோகாமல் உதிரும் காய்ந்த சருகு 
அதுபோல் அமைதியான முற்றுப்புள்ளி
கதையின் முடிவில் காத்திருக்கும் என்ற
கனவில் கணங்கள் கடிதாய் விரையும்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community