Thursday, May 3, 2012

ஜன்ம சாபல்யம்

செல்ஃபோனிடமும் டிவி ரிமோட்டிடமும்


தீராத பகையும் வெறுப்பும் தொடர்கிறது

அவற்றை இயக்கும் கம்ப சூத்திரம் மிரட்டுது

கிழட்டுக் குதிரைக்கு புது வித்தை வராது

வேண்டாத, மனம் வேண்டாத அநாவசியங்கள்

கர்ணனின் கவச குண்டலமாய் அனைவர்க்கும் கைபேசி

ஆற்றும் வினைகளோ ஆயிரம் எல்லோர்க்கும் செல்லம்

ஏனோ மயக்கவில்லை என்னை இதுவரைக்கும்

பண்பலை வரிசைகள் பாட்டோடு ஊர் சங்கதியை

பாங்காக வழங்கக் கேட்பதின்பம் எனக்கு

சின்னத்திரை சித்திரங்களோ சித்திரவதைகள்

சீரியல்களில் சிரிப்பாய் சிரிக்கும் கருமங்களில்

சிக்காத சின்ன மீன் மாட்டிக்கொண்டது இணைய வலையில்

இணையில்லா இன்பப் பெருவெளியில் என் ஜன்ம சாபல்யம்

IndiBlogger - The Indian Blogger Community

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community