Monday, January 16, 2012

முதல் பனி

IndiBlogger - The Indian Blogger Community
பாடம் படிக்கும் மாணவியாய்
பாச மகள் பகிர்ந்து கொண்டாள்
பரவசமான முதல் பனி மழையை
பூப் போல் கையில் விழும் வடிவம்
பொலிவாய் செதுக்கிய நட்சத்திரம்
பொசுக்கென கரைந்துவிடும் மாயம்
பொம்மை மனிதன் செய்யும் கூட்டம்
பாகுபாடின்றி பெரியவரும் சிறாரும்
பளிங்கு போல் எங்கும் ஒரு நிர்மலம்
பரிசுத்தமான நிகழ்வதுவோர் அதிசயம்
பன்முக இயற்கையின் தூய தரிசனம்
பரவிக்கிடந்தது அங்கே ஒரு பயபக்தி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community