Saturday, January 7, 2012

நானாகத்தான்

IndiBlogger - The Indian Blogger Community
நான் தான் முட்டாளோ
முதல் ஆளாய் வந்துவிட்டு
முழிக்கிறேன் நேரம் தவறாமை
மறந்த விழாக் கூட்டத்தினர் முன்
முதல் ஆளாய் கண்டிக்கிறேன்
கண் முன்னே அக்கிரமம் நடக்கையில்
மௌனமாய் மற்றவர் பார்க்கையில்
முதல் ஆளாய் கொதிக்கிறேன்
கலாசாரம் காற்றில் பறக்கையில்
கைதட்டி பிறர் அதை ரசிக்கையில்
கேவலமில்லை இந்த மௌடீகம்
நான் இருப்பேன் நானாகத்தான்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community