Thursday, January 5, 2012

திரவியம்

IndiBlogger - The Indian Blogger Community
புண்ணியம்தன்னைத் தேடித் தேடி
கோவில் கோவிலாய் சென்று
குளங்களில் தவறாது புனித நீராடி
திருவோடுகளில் சில்லறை வீசி
உண்டியலில் காணிக்கை செலுத்தி
பக்திப்பழமாய் பரவச கோலம்
நெஞ்சில் ஈரம் இன்றி அதிகாரம்
பொருளுக்கும் புகழுக்கும் பேராசை
பெருக்கியது பணமா புண்ணியமா
காலமறிந்து செய்யும் உதவி
ஓசையின்றி வழங்கிய நிதி
கல்விக்கண் திறக்க விரும்பி
பச்சை வளம் பூமியில் காத்து
தீய சிந்தனை செயல் ஒழித்து
தேடிய புண்ணியம் திரவியம்
தலைமுறைகள் அதில் வாழும்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community