Thursday, August 18, 2011

பெண்ணிவள்

IndiBlogger - The Indian Blogger Community
ஆரம்பம் எதுவென தெரியாமல்
அப்பாவி கணவன் தடுமாறுகிறான்
நிர்மலமான வானம் ஏன் கருத்தது
கடகடவென ஏன் இடித்தது
பளீரென ஏன் மின்னியது
கனமழை ஏன் கொட்டியது
பெண்ணிவள் புயலா பூகம்பமா
என்ன பிழை நான் செய்தேன்
குறை ஒன்றும் கூறவில்லை
வாதமும் புரியவில்லை
தடை ஏதும் சொல்லவில்லை
ஒன்றுமே புரியவில்லையே
இன்று நேற்றல்ல பல மாதம்
கடந்தும் கனன்று கொண்டிருக்கும்
என்றோ பேசியது செய்தது
எரிமலையை ஆராய்ந்து பயனுண்டோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community