Sunday, April 17, 2011

திருவிழா

IndiBlogger - The Indian Blogger Community
வைராக்கியம் தொலத்த ஓர் இனம்

வெக்கமில்லாமல் குடிக்குது

மகிழ்ந்தாலும் குடிக்குது

துக்கத்திற்கும் குடிக்குது

உளருது உருளுது பிறழுது

குடும்பஸ்தன் குடிக்கிறான்

எத்தனை நாள் அடி வாங்குவாள்

தனியே பாரம் சுமக்கிறாள்

தந்தை நிழலில்லா குழந்தைகள்

கல்லூரி வாலிபன் குடிக்கிறான்

புதிய கலாசாரம் படைக்கிறான்

பள்ளிச் சிறுவன் ருசிக்கிறான்

என்ன மிஞ்சும் சாதனை களத்தில்

சோதனை இது கொடியது

குடியை வளர்த்த ஓர் அரசு

தொடர்ந்து காக்கும் அடுத்த அரசு

வற்றாத ஊற்றாக வருமானம்

கோடிகளில் கொட்டிக் கொடுக்க

இலவசங்கள் அள்ளி வழங்க

பெருகியோடும் மதுக் கடலில்

பாழாய் போகும் தலைமுறைகள்

யாருக்கு இங்கு அதில் அக்கரை

யாவரும் அறிந்ததே இச்சீர்கேடுகள்

ஆற்றை கண்டேனா அழகரைச் சேவித்தேனா

என்றிருக்க முடியாத மதுரைக்காரி

ஊரெங்கும் திருவிழா விமரிசையாய்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community