Friday, October 29, 2010

மாயமிது

IndiBlogger - The Indian Blogger Community
குடுக்கணும் வாங்கிய கடனை வட்டியோடு
வானம் நினைத்தது மிக்க கரிசனத்தோடு
நீண்டன நீர்க்கோடுகள் வெள்ளிச் சரம் சரமாய்
நெளியாத நேர்கோடுகள் அத்தனையும் அம்பாய்
நளினமான வயலின் இசையாய் வருட சாரலாய்
நந்தியின் கை மத்தளமாய் சண்டமாருதமாய்
மண்ணும் குளிருது மனமும் சிலிர்க்குது
மறுபடியும் மறுபடியும் நிகழும் மாயமிது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community