Saturday, October 2, 2010

வரமா

IndiBlogger - The Indian Blogger Community
சாபமோ வரமோ
நீண்டுவிட்ட ஆயுள்
நரைத்த முடியும்
உதிர்ந்த பல்லும்
உளறும் சொல்லும்
சுருங்கிய தோலும்
வற்றிய முகமும்
அழகின் அழிவே
அதைவிட பெரிதே
நோயும் வலியும்
தேய்ந்த எலும்பில்
குறுகிவிட்ட குடலில்
மங்கிய பார்வையில்
மந்தமான செவியில்
முடங்கிய நிலையில்
வெறித்த அமைதியில்
ஒருவித வெறுமையில்
உள்மன தனிமையில்
வைத்திய செலவில்
வேற்றிட நிழலில்
விளங்காத கலக்கத்தில்
வரமா ஆயுள் நீழ்வது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community