Wednesday, May 12, 2010

தவம்

IndiBlogger - The Indian Blogger Community

பயன் எண்ணாத பாவை
படைக்கின்றாள் அமுது
பரிவுடன் சமைத்து
பதமான உப்புமா
பூரியோடு குருமா
பளீரென சாதம்
பக்குவமாய் குழம்பு
பதார்த்தங்கள் பல
பச்சடியும் உண்டு
பாயசமும் செய்து
பாசமும் கலந்து
பரிமாறிய விருந்து
பசியாறிய முகத்தில்
பார்க்கின்ற திருப்தி
பரிசாகும் அவளுக்கு
புருஷனும் பிள்ளைகளும்
புசிக்கின்ற ரசனைக்கு
பெண் இருப்பாள் தவம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community