Monday, March 15, 2010

உடன் வருவேன்

உடன் வருவேன் நிழலாக
யமனின் சித்ரகுப்தனாக
உள்ளங்கை ரேகையாக
உள்ளங்கை 'மவுசா'க
பண்ணிய பாவபுண்ணியமாக
பதவிசான பத்தினியாக
படுத்துகின்ற பிசாசாக
உறுத்துகின்ற முள்ளாக
உள் மனசாட்சியாக
உதற முடியா உடும்பாக
உறுஞ்சுகின்ற அட்டையாக
ஒட்டியே உடன் வருவேன்
ஒன்றாய் ஒரு காலத்தில்
பரமாத்மாவில் கரையும் வரை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community