Wednesday, March 17, 2010

பொருளென்ன பொருளே

பொருள் நாடி புலம் பெயர்ந்தவர்கள்
பொருள் தேடி புலன் வென்றவர்கள்
பொருள் அடக்கிய புத்தகம் போன்றவர்கள்
பொருள் புரிவதற்கு புத்தியை தீட்டியவர்கள்
பொருள் வழங்கி புண்ணியம் ஈட்டியவர்கள்
பொருள் விளங்காத புதிராய் போனவர்கள்
பொருள் ஒன்றே குறியாய் ஆனவர்கள்
பொருள் புரிந்து வாழ்ந்து சென்றவர்கள்
பொருள் அடக்கம் ஆவார்கள் இவர்கள்
பொருள் பொதிந்த உலகசரித மறையிலே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community