Sunday, March 7, 2010

தலைப்புச் செய்தி

கதியென்ன தலைப்பே உன் தலையெழுத்து இன்று மாறியதோ
தனயன் பிடித்தலைந்த பிராயம் தாண்டி சற்றே விட்டிருந்தது
தாரம் வந்த பின்னே கைக்கு மீண்டும் கிடைத்த பற்றுகோல்
தலைப்புச் செய்திகள் அன்று முக்கிய சங்கதிகள் அல்லவோ
கண்ணைக் கவரும் கருத்துப் பதிவுகளாய் இருந்தனவே
நுனியை பல்லால் கடிக்கையில் நாணம் என்று கொள்ள
விரலைச் சுற்றி திருகுகையில் தயக்கம் என அறிய
லேசாய் உரசிச் சென்றால் அது உல்லாச சமிக்ஞை
பாய்மரமாய் காற்றில் பறந்து விரிந்தால் புயல் சின்னம்
வரிந்து முன்னிழுத்து இடுப்பில் செருகினால் அது
வந்து பார் களத்துக்கு நேருக்கு நேர் என்று சவால்
கணவனின் கை துடைக்க பிரியமான கைக்குட்டை
காணாமல் அது போனதால் நட்டமென்ன நாட்டிலே
சின்னச் சின்ன செய்திகள் சிக்காமல் வெறுமையே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community