சித்திரையிலா தையிலா
வருடம் பிறப்பதெப்போ
மேதைகளிடை விவாதம்
பேதைக்கில்லை சந்தேகம்
காற்றிலே வேப்பம்பூ வாசம்
கட்டியம் கூறும் வரவேற்பு
காணும் திசையெங்கும் சிரிக்கும்
மயங்க வைக்கும் மல்லியப்பூ
சங்கம் வளர்த்த கட்டிலிலே
தமிழ் வளர்ந்த தொட்டிலிலே
பாண்டி மாநகரத்திலே
தினந்தோறும் திருவிழா
அழகு மீனாளின் மணவிழா
அனைவர் வீட்டிலும் பாயாசம்
மாசி வீதியிலே தேரோட்டம்
வைகையிலே அழகர் தரிசனம்
பால் போல் பெளர்ணமி காயும்
உல்லாசமான காலகட்டம்
சிற்பமாய் செதுக்கிய காட்சி
சித்திரமாய் மின்னும் கோலம்
சிங்கார கனவுகள் ஊற்றெடுக்க
சிருங்கார நினைவுகள் பொங்கிவர
மங்களமாய் மனைகள் துலங்கும்
மதுரமான மாதமே சித்திரை
உவப்பான திங்களிதிலே
உன்னதமாய் சிறந்திருக்க
தீந்தமிழர் இல்லங்களில்
பிறக்கும் புதிய ஓராண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment