Tuesday, March 16, 2010

தெரிந்துகொள்

தெரியவில்லை எது எனக்கு தெரியுமென்று;
இதை அது என்றும், அதை இது என்றும்
தவறாக எண்ணியிருந்தேன் - இல்லை,
எது என்ன என்று எண்ணாமலிருந்தேன்,
கிழக்கே உதித்து, மேற்கே சாயுது
என்று நினைத்த சூரியன் பாவம்
ஓரிடத்தில் நிற்க நாந்தானே சுற்றுகிறேன்!
மாயாமயக்கமிது-மக்காய் மக்களை ஆக்குது,
மதியை வளர்த்து, மயக்கம் தீர
மனம் என்று விரும்புமோ?
ஏன், எதற்கு, எப்படி என்று சாக்ரடீஸ் போல
அறிவை தீட்ட வேண்டாமோ?
பிரபஞ்ச எல்லை வரை
சிந்தனை நீண்டிட வேண்டாமோ?

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community