வேண்டும் தனி வாழ்க்கை
ஆணின் நிழலின்றி
மனம் போல் தவமாய்
கோபமும் தாபமும்
அடக்குமுறையும்
அடிமைத்தளையும்
சுமந்து இறக்கி
சமைத்துப் படைத்து
செக்குமாடு போலுழல
எடுத்தப் பிறவி எனும்
விதியுடைத்து துணிந்து
துறந்து சிறகை விரித்து
பறக்கும் எண்ணம் பழசு
இன்றும் ஔவையர் பலர்
Monday, March 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment