Sunday, March 7, 2010

பதங்கள்

பதங்களே முல்லை மல்லி கொடி அரும்புகளே
தொடுத்து வைக்க மணக்கும் வாடாமாலைகளே
தொடுத்த பின் திரும்பி வாரா வேக அம்புகளே
கற்பனைகள் மின்னும் நவரத்தின ஆரங்களே
எண்ணத்தின் வண்ணம் நிறைந்த ஆடைகளே
தேர்ந்த வீரன் ஏந்திடும் கூர்முனை வாட்களே
விவாத மன்றங்களில் பறக்கும் தீப்பொறிகளே
போர் மூட்டிடக்கூடும் பகை தீர்த்திடக்கூடும்
எல்லையில்லா வலியுடை மொழி சிற்பங்களே
இனிதாய் நாமிங்கு சுவைக்கும் நற்கனிகளே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community