பதங்களே முல்லை மல்லி கொடி அரும்புகளே
தொடுத்து வைக்க மணக்கும் வாடாமாலைகளே
தொடுத்த பின் திரும்பி வாரா வேக அம்புகளே
கற்பனைகள் மின்னும் நவரத்தின ஆரங்களே
எண்ணத்தின் வண்ணம் நிறைந்த ஆடைகளே
தேர்ந்த வீரன் ஏந்திடும் கூர்முனை வாட்களே
விவாத மன்றங்களில் பறக்கும் தீப்பொறிகளே
போர் மூட்டிடக்கூடும் பகை தீர்த்திடக்கூடும்
எல்லையில்லா வலியுடை மொழி சிற்பங்களே
இனிதாய் நாமிங்கு சுவைக்கும் நற்கனிகளே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment