Sunday, March 14, 2010

அரசி

ஆதிக்கம் செய்கிறான் ஆண்மகன்
ஆண்டாண்டு காலமாய் அவனும்
ஆணவமாய் அதிகாரம் செய்கிறான்
அடக்கிதான் வைக்கிறான் அவளை
அபலை போலத்தான் வெளியிலே
அவளும் காட்சி தருகின்றாள்
அம்மாடி அதுதானா நிலவரம்
அணுவும் அசையுமோ அவளின்றி
அவளுக்காவே அவளைச் சுற்றியே
அவனுலகம் இயங்குதே அறியாமலே
அச்சாணிக்கு அடங்காத சக்கரமா
ஆதாரமான தாரம்தானே அரசி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community