Sunday, March 14, 2010

நித்தியம்

பிடிக்கவில்லை
ஓடும் மேகங்கள் ஒன்றையொன்று
பிடிக்கவேயில்லை

முடிக்கவில்லை
சோலைக்குயில் தொடர்கதையை
முடிக்கவேயில்லை

தடுக்கவில்லை
மலர்கள் மதுவுண்ணும் வண்டுகளை
தடுக்கவேயில்லை

எட்டவில்லை
கடலலைக்கு கரையின் நெஞ்சம்
எட்டவேயில்லை

நிறுத்தவில்லை
மாறன் மலர்க்கணைகளை
நிறுத்தவேயில்லை

நிற்கவில்லை
கடலோடு நதிகளின் சங்கமம்
நிற்கவேயில்லை

முடியவில்லை
இரவு பகலின் கண்ணாமூச்சி ஆட்டம்
முடியவேயில்லை

புரியவில்லை
பாதையிது எங்கு போகுமென்று
புரியவேயில்லை

தெரியவில்லை
தேடல் என்று முடியுமென்று
தெரியவேயில்லை

நிகழவில்லை
இறப்பேயில்லாத பிறப்பு
நிகழவேயில்லை

இறக்கவில்லை
சத்தியத்தின் நித்தியம்
இறக்கவேயில்லை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community