பரமபத ஆட்டத்திலே
மாத்தி மாத்தி
பாம்பு கொத்தினாலும்
எத்தனையோ ஏணிகள்
ஏத்திவிட இருந்தனவே
ஓடுமென்ற குதிரை
காலை வாரிவிட்டது
எதிர்பாரா கழுதையும்
காசை அள்ளித் தந்தது
என்ன விந்தையிது
தாயமா மாயமா
யோகமா நேரமா
எதுவென்று தெரியவில்லை
நல்லதும் அல்லாததும்
நினைக்காமல் வருவது
நம்பிக்கை இழக்காமல்
ஆடும் வரை சுவையுண்டு
நிச்சயமில்லா வெற்றி
நிரந்தரமில்லா தோல்வி
நித்தியமான நியதி
ஏற்றமும் இறக்கமும்
இரவும் பகலுமாம்
சுழலும் சக்கரமிது
உருளும் சொக்கட்டானிது
ஓயாது விளையாடு
சொக்கி சிக்கி
திக்குமுக்காடி
நம்பி வெம்பி
மயங்கித் தெளிந்து
விரும்பி வெறுத்து
விதவிதமாய் தவித்து
மாறி மாறி அனுபவித்து
சூதாட்டமிதில்
சதிராடாதோர் யார்
வினையோ விதியோ
அலுக்காத சலிப்பும்
அலுங்காத கெலிப்பும்
பகடையாய் உருள
சகடம் செல்லும்
காலம் வெல்லும்
Saturday, March 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment