Saturday, March 13, 2010

மீதம்

இன்னும் ஏதோ உளது
அறியாத சுவை ஒன்று
காணாத சுகம் ஒன்று
என்னும் வரை ஈர்ப்பு
இன்றே உண்டு முடித்து
அணைத்துக் களைத்து
பழகிப் பழசான பின்னும்
புதிதாய் பூத்து நின்று
புதிராய் திகைக்க வைத்து
புரட்டாத பக்கத்தைப் படிக்க
அழைத்துக்கொண்டேயிரு
திகட்டாத தெள்ளமுதாய்
தித்திக்க வேணும் தினமும்
பெண்ணே முழுதாய் காட்டாதே
மொத்தமாய் அவிழ்க்காதே
மீதம் நாளை விருந்தாகட்டும்
கடைசித் துளி காதலுக்கில்லை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community