காரிருள் வானில்
கண்ணைச் சிமிட்டும்
ஒற்றைத் தாரகை
வாடைக் காற்றில்
ஒரே தேவை
ஒரு கை அணைக்க
ஓடிக் களைத்து
ஓய்ந்து நின்று
இழுத்துவிட்ட மூச்சு
வந்த பாதை வியந்து
மீதிப் பயணம் மலைத்து
திகைக்கின்ற கணத்திலே
பல்லும் முடியும் உதிர
பற்றும் பொறுப்பும் அகல
அயர்வும் சோர்வும் அமர
கனவாய்க் காலம் தோன்ற
கனிவாய் நினைவும் மாற
கணக்கு சரியாய் முடிய
தனியாய் வந்து
திருவிழாவில் வளர்ந்து
தனியாய்ப் போக
தாமரை இலையில்
உருளும் நீராய்
உள்ளம் மாறிட
புள்ளியாய் உதித்து
பூவாய்ப் பூத்து
புனலாய்ப் பாய்ந்து
பரந்தோடி ஓய்ந்து
துளியாய்க் கரைய
காத்திருக்கும் சங்கமம்
தளிராய் இளசாய்
பச்சையாய் பளபளப்பாய்
முற்றலாய் சருகாய்
காய்ந்திடும் இலை
கடைசியில் தானாய்
வலிக்காமல் உதிரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment