Saturday, March 13, 2010

விழி வழி கவிதை

சொல்லுமே கண்கள் பல கதை
நாவால் சொல்ல தேவையின்றி
சத்தம் ஒன்றும் எழுப்பாமல்
மூன்றாம் பேர் அறியாமல்
உவமான உருவகம் இல்லாமல்
ஏடும் எழுத்தாணியும் தேடாமல்
பரிமாறும் விருந்திலே சுவையிலே
பசி தீராது உண்டு முடியாது
கவிஞர் உரைக்காத கற்பனை
உள்ளத்தின் விழி வழி கவிதை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community