Sunday, March 14, 2010

புரட்சி

பெண்ணே பேரழகே
பாடப்பெறும் உருவே
கவிதைகளின் கருவே
கண்ணே மணியே
கனியே சிலையே
மானே மீனே
தேனே தேரே
மொட்டே சிட்டே
பட்டே தேட்டே
பூவே பெளர்ணமியே
பொன்னே பூபாளமே
உவப்பான உவமைகள்
எத்தனை எத்தனையோ
பற்பல உறுப்புகள்
பெருமை பெற்றே
பெயரோடு திரிய
கண்ணும் இமையும்
கன்னமும் கழுத்தும்
காதும் காலும்
இதழும் குழலும்
பல்லும் விரலும்
நகமும் நாபியும்
சதையும் சருமமும்
தனமும் இடையும்..
இத்தனை இருக்கையில்
இடைக்கு கீழே
தொடையின் இடுக்கேன்
இருட்டடிப்பானது
ரசமோ விரசமோ
ரசிப்பவர் கண்ணிலே
காமமோ மோகமோ
போகமோ சோகமோ
வேதனையோ சோதனையோ
காணாத இடமோ
பேதமேன் பிரிவேன்
பேசப்படாததேன்
விழித்துக்கொண்டது பெண்ணினம்
வீறு கொண்டது மெல்லினம்
பிறந்தது எழுச்சி
பாடலில் புரட்சி
வெளிப்படை உணர்ச்சி
கவிதையின் மலர்ச்சி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community