Monday, March 15, 2010

பால பருவம்

இல்லை கவலை முதலில்
இல்லை கவலை முடிவில்
இவ்விரண்டும் எல்லைகள்
இடையிலே தொல்லைகள்

சின்னத் தலைகள்
பெரிய கற்பனைகள்
நிறைய ஐயங்கள்
எண்ணற்ற வினாக்கள்
பலமான ஊகங்கள்
பிரம்மத்தின் பிம்பங்கள்
பரிசுத்த பிரதிகள்
அஞ்ஞான அரும்புகள்
விருட்ச விதைகள்
கற்பூரச் சுடர்கள்

படித்த பல சித்திரக்கதைகள்
பார்த்த ஒலிஒளி சித்திரங்கள்
அவற்றின் விரசூரர்கள்
பயங்கர பேய்கள்
ராட்சத பூதங்கள்
அவைதரும் பயங்கள்
அபூர்வ லோகங்கள்
அதிசய சங்கதிகள்
விரிந்த விழிகள்
விவரிக்கும் விந்தைகள்

பால பருவம் இதுவே
பால் போல் மனமே
திரிவது எங்ஙனம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community