இல்லை கவலை முதலில்
இல்லை கவலை முடிவில்
இவ்விரண்டும் எல்லைகள்
இடையிலே தொல்லைகள்
சின்னத் தலைகள்
பெரிய கற்பனைகள்
நிறைய ஐயங்கள்
எண்ணற்ற வினாக்கள்
பலமான ஊகங்கள்
பிரம்மத்தின் பிம்பங்கள்
பரிசுத்த பிரதிகள்
அஞ்ஞான அரும்புகள்
விருட்ச விதைகள்
கற்பூரச் சுடர்கள்
படித்த பல சித்திரக்கதைகள்
பார்த்த ஒலிஒளி சித்திரங்கள்
அவற்றின் விரசூரர்கள்
பயங்கர பேய்கள்
ராட்சத பூதங்கள்
அவைதரும் பயங்கள்
அபூர்வ லோகங்கள்
அதிசய சங்கதிகள்
விரிந்த விழிகள்
விவரிக்கும் விந்தைகள்
பால பருவம் இதுவே
பால் போல் மனமே
திரிவது எங்ஙனம்
Monday, March 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment