செல்வது செவிக்குள்
பலர் சொல்லும் சேதி
தெளிந்து பெறலாம்
அதிலே நல்ல நீதி
முதியவர் சொன்னார்
என்னுள்ளே உளது
ஓநாய் இரண்டு
போரிட்டுக்கொண்டு
காமம் கோபம்
வன்மம் குரோதம்
பொய் பொறாமை
கர்வம் பேராசை
இவற்றுடன் ஒன்று
அன்பு அகிம்சை
சாந்தம் சத்தியம்
பொறுமை ஈகை
நேர்மை நியாயம்
இப்படி இன்னொன்று
குழந்தை கேட்டது
எது வெல்லுமென்று
முதியவர் சொன்னார்
ஊட்டி வளர்த்தது என்று
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment