Monday, March 15, 2010

ஓநாய்கள்

செல்வது செவிக்குள்
பலர் சொல்லும் சேதி
தெளிந்து பெறலாம்
அதிலே நல்ல நீதி

முதியவர் சொன்னார்
என்னுள்ளே உளது
ஓநாய் இரண்டு
போரிட்டுக்கொண்டு

காமம் கோபம்
வன்மம் குரோதம்
பொய் பொறாமை
கர்வம் பேராசை
இவற்றுடன் ஒன்று

அன்பு அகிம்சை
சாந்தம் சத்தியம்
பொறுமை ஈகை
நேர்மை நியாயம்
இப்படி இன்னொன்று

குழந்தை கேட்டது
எது வெல்லுமென்று
முதியவர் சொன்னார்
ஊட்டி வளர்த்தது என்று

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community