Monday, March 15, 2010

எவளோ

கையில் பிடிப்பேனோ கானல்நீரை
கனவில் வந்த செந்தாமரையை
ஆலோலமென கூவிய வள்ளியோ
அர்ச்சுனனை அடைந்த அல்லியோ
சூடிக் கொடுத்த பாவை கோதையோ
குழல் கேட்டு மயங்கிய ராதையோ
பொன் மானைக் கேட்ட சீதையோ
மோதிரம் தொலைத்த சகுந்தலையோ
நளனைத் தொலைத்த தமயந்தியோ
சொக்கேசனின் மதுரை மீனாளோ
அவள் தோள் மீதமர்ந்த கிள்ளையோ
எகிப்திய அழகி கிளியோபாத்ராவோ
எவளோ இவள் எக்காவிய நாயகியோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community