நாயே நிமிர்த்த முடியா உன் வாலோ
நன்றியைத்தான் நன்றாய் காட்டுமே
ஆடே உன் வாலோ அளவானதே
புலியே உன் வாலை சீண்டலாகாதே
குதிரையே உன் வாலில் காசு ஓடுமே
வாலறுந்த நரியே தந்திரம் செய்தாயே
விலாங்கின் தந்திரம் பாம்புக்கு மீனுக்கு
வாலை தலை தனியே காட்டுவதே
அறுந்த பல்லியின் வால் துடிக்குமே
மீண்டும் புதுசாய் வால் வளர்ந்திடுமே
தன் வாலைத் துரத்தி ஓய்ந்த பின்னே
பூனையும் கற்றது பாடம் ஒன்றே
ஒய்யார ஆசனமானது அனுமன் வாலே
தலை இருக்க வால் ஆடலாகாதே
வால் பிடித்து பிழைக்க வேண்டாமே
வாலை விட்டு தும்பை பிடிக்காதே
வம்பர் வாலை நறுக்க அஞ்சாதே
வளமும் நலமும் வாலாய் வளரட்டுமே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment