Monday, March 15, 2010

விதைத்தது

நேற்று என்பது வெற்று நாளல்ல
இன்று வானினின்று குதிக்கவில்லை
நாளை ஊகம் செய்ய முடியாததல்ல

நேற்று என்பது விதைத்த விதை
இன்று முளைத்துவிட்ட நாற்று
நாளை முற்றித் தொங்கும் கதிர்
நட்டதுதானே முளைத்து நிற்கும்?
முற்பகல் வினையே பிற்பகல் விளைவே!

நல்லதும் கெட்டதும் விதித்ததல்ல, விதைத்தது.
கள்ளிச்செடியில் குத்தும் முள்ளிருக்கும்
கனிமரத்தில் இனிப்பாய் பழம் பழுக்கும்
விபரமின்றி விதைத்து
விபரமறிந்து வெதும்புவதென்னே!

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community