எனக்கு நானே நண்பன் முதலிலே
மாற்றமில்லை அந்த முடிவிலே
உச்சி மீது வானிடிந்து விழட்டுமே
அச்சம் எனக்கு பழக்கமில்லையே
என்னை எரித்து சாம்பலாக்கினால்
எழுந்து வருவேன் புத்துயிருடன்
நெஞ்சில் உரமும் தோளில் திறமும்
உண்டெனக்கு தோற்க மாட்டேன்
பத்துவிரலும் துணையிருக்க கூடவே
பகுத்தறிவும் பக்கபலமாயிருக்க
பார்த்துக் கொண்டேயிரு நான்
மேலும் பலசாலியாகப்போவதை
Monday, March 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment