Friday, March 12, 2010

ஒரு மைல்கல்

வந்தது அறுபது
மயங்குது மனது
ஒரு மைல்கல்
வாழ்வின் உரைகல்
நின்று நிதானிக்க
திரும்பிப் பார்க்க
விரும்பி ரசிக்க
திகைத்து மலைக்க
நன்றே நடந்தது
நன்றி தளும்புது
மீதமும் கடக்க
இதமாய் முடிக்க
நம்பி நடக்க
நடுக்கம் தவிர்க்க
ஊன்றுகோல் எத்தனை
தூண்டுதல் எத்தனை
ஆறுதல் அளித்திட
உறவும் நட்பும்
நிழலாய் இருக்க
நிம்மதி நிலைக்க
புதிய பூவின்
சுகந்த மணமாய்
மலர்ந்த நாள்
எழுதாத தாள்
அடுத்த அத்தியாயம்
எப்படி தொடருமோ
கடைசி வரை
ஆர்வம் ஏறும்
மர்மக் கதை
தருமோ போதை
சலித்து ஒதுக்கி
தள்ளாது எதையும்
நலிந்து தவங்கி
தள்ளாத போழ்தும்
நன்றே நாளை
தள்ளும் யுக்தி
தரட்டும் சக்தி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community