வந்தது அறுபது
மயங்குது மனது
ஒரு மைல்கல்
வாழ்வின் உரைகல்
நின்று நிதானிக்க
திரும்பிப் பார்க்க
விரும்பி ரசிக்க
திகைத்து மலைக்க
நன்றே நடந்தது
நன்றி தளும்புது
மீதமும் கடக்க
இதமாய் முடிக்க
நம்பி நடக்க
நடுக்கம் தவிர்க்க
ஊன்றுகோல் எத்தனை
தூண்டுதல் எத்தனை
ஆறுதல் அளித்திட
உறவும் நட்பும்
நிழலாய் இருக்க
நிம்மதி நிலைக்க
புதிய பூவின்
சுகந்த மணமாய்
மலர்ந்த நாள்
எழுதாத தாள்
அடுத்த அத்தியாயம்
எப்படி தொடருமோ
கடைசி வரை
ஆர்வம் ஏறும்
மர்மக் கதை
தருமோ போதை
சலித்து ஒதுக்கி
தள்ளாது எதையும்
நலிந்து தவங்கி
தள்ளாத போழ்தும்
நன்றே நாளை
தள்ளும் யுக்தி
தரட்டும் சக்தி
Friday, March 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment