Saturday, March 13, 2010

ஆரணங்கே

முட்ட வரும் ரெட்டை திமிலை மோகித்து
வட்டமிட்டு பார்வையாலதை சுகித்து
இனக்கவர்ச்சியோடு அயராது எதிர்நீச்சலடித்து
ஆத்தா நகை வித்து கற்க அனுப்பிய
அப்பன் கனவை கடலில் கரைத்து
தொடையை பிடிக்கும் ஜீன்ஸாய்
தான் மாறலாகாதா என்று ஏங்கி
நடையல்ல நாடகம் நடப்பதென்று
மெளனமாய் வாய்க்குள் விசிலடித்து
மனசுக்குள் மஜாவாய் மார்க் போட்டு
வகை வகையாய் விருந்துண்ண
எச்சூறி காத்திருக்கும் விடலைகளை
ஏமாற்ற விரும்பாத இளகிய மனசோடு
சிட்டுக்கள் படபடத்து காத்திருக்க
செய் ஏதாவது செய் என்றழைக்க
ஆணுக்கு ஆணே விரோதியாய்
ஆணை பிறக்கலாமோ அடக்கலாமோ
கங்கை குடத்துக்குள் அடங்கலாமோ
கோபுர கலசங்கள் மறைக்கலாமோ
தரிசன பரவசம் மறுக்கலாமோ
கல்லூரிகள் சிறைச்சாலைகளாவது
அநீதி அதுவோர் பெண்ணடிமை மரபு
விலங்குகள் உடைத்திடு ஆரணங்கே
ஆராதிக்க காத்திருக்கு உலக அரங்கே
கூடங்கள் வேண்டா குத்துவிளக்குகள்
சிங்கார கிளிகள் தவுசன்ட் வாட் பல்புகள்
சுமக்க வேண்டாம் கலாச்சார சிலுவைகள்
முளைத்துவிட்டன சுதந்திர சிறகுகள்
ஆணாதிக்க மூடகம் மோதி தகர்
அடக்கம் அச்சம் அனைத்தும் தவிர்
கை நீட்டி ஆதரவாய் காத்திருக்கு
கருமமாய் காமம் வளர் திரையுலகு
பெண்களே கண்களே ஒளியுடையீரே
அழகை ஒருநாளும் ஒளிக்காதீர்
அடிமைப்பட்டு கிடக்காதீர்
இளமை சீரெல்லாம் பறைசார்றாது
சீரழிந்து போவதென் கொடுமை
சிலிர்த்து வா சிறகை விரித்து வா
சிறப்பே வா சிறையை விட்டு வா
பண்பாடென்பது வெறும் கூப்பாடு
அடக்குமுறையின் மறுபெயரு
மதர்த்து நில்லு மதிப்பை அள்ளு
உரிமையை சொல்லு தடையை தள்ளு
உலகை வெல்லு நீதான் கள்ளு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community